பிரதம செயலாளர் அலுவலகம்

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கரப்புக்குத்தி வீதிப்பாலமானது வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வடக்கு பிரதேசசiபின் தவிசாளர் ச.தணிகாசலம் அவர்களால் 18 செப்ரெம்பர் 2019 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது Read More »

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட வரி மதிப்பீட்டாளர் (04) மற்றும் சாரதி (12) ஆகிய ஆளணிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 2019.08.16 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ .கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2019ம் ஆண்டின் 2ம் காலாண்டுக்கான மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 18 யூலை 2019 ஆம் திகதி பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் திரு.அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019 Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்குமாகாணத்தில் காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர் (77), கலாசார உத்தியோகத்தர் (03), பட்டதாரி ஆசிரியர் தகவல் தொழிநுட்பவியல் பாடம் (09) ஆகிய ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 17 யூலை 2019 அன்று மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »

வடக்குமாகாண இணைந்த சேவையின் பதவியணியான தொழினுட்ப உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்குமாகாண இணைந்த சேவையின் பதவியணியான தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழினுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்) தரம் III இற்கான வெற்றிடங்களிற்காக தெரிவு செய்யப்பட்ட 03 விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் பங்கேற்றதுடன் தொழினுட்ப உத்தியோகத்தர்களிற்கான நியமனக் கடிதங்களையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வானது 2019.05.08 ஆம் திகதி வடக்கு மாகாண சபை வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்குமாகாண இணைந்த சேவையின் பதவியணியான தொழினுட்ப உத்தியோகத்தர் சேவை அலுவலர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் முகமாக சிங்களம் / தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது. இதற்கிணங்க, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் வளாகத்தில் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி மற்றும் அலுவலர்களின் பங்களிப்புடன் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இந் நிகழ்வானது சுப முகூர்த்த வேளையான 15.04.2019 ஆம் திகதி காலை 11.17 மணியளவில் நடைபெற்றது.

சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது Read More »

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் பயிற்சித்தரம் (ஒரு வருடம்) இதற்கான 04 வெற்றிடங்கள், அலுவலக பணியாளர் சேவையின் தரம் III இற்கான 91 வெற்றிடங்கள், உள்@ராட்சி அமைச்சின் திணைக்கள சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவியணிக்கான 11 வெற்றிடங்கள் ஆகிய வற்றிற்கான தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2019.04.08 ஆம் திகதி யாழ்.மாநகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது Read More »

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர். கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் கீழ் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறை வேற்றுத்தர அதிகாரிகளுக்கு “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப் பட்டறையானது வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் நடாத்தி முடிக்கப்பட்டு

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு 3 ஏப்பிரல் 2019 ஆம் திகதி, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. பிரதி பிரதம செயலாளர்கள் – நிதி மற்றும் நிர்வாகம், பிரதம செயலாளர் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக தேசிய கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது Read More »

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது 02 ஏப்ரல் 2019 ஆம் திகதி அன்று கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதவம் ஓட்டிஸம் நிலையத்திலிருந்து தங்கள் பெற்றோருடன் வருகைதந்த சிறுவர் குழாமினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் கொத்தணியின்கீழ் வரும் திணைக்களங்களின் அலுவலர்கள் ஆகியோர்

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது Read More »