உலக சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பிரதம செயலாளர் செயலக கொத்தணியினால் நல்லூர் ஆலய சூழலில் சுத்திகரிப்பு செயற்திட்டம் முன்னெடுப்பு 2023
நாடளாவிய ரீதியில் வருடா வருடம் செப்ரெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலக சுத்திகரிப்பு தினம் (World Cleanup Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் ‘முறையற்ற வகையில் கடற்கரையில், ஆற்றினை அண்டிய காடுகள் மற்றும் பாதைகளுக்கு விடுவிக்கும் கழிவுகளை சுத்திகரித்தல்’ எனும் தொனிப்பொருளில் 164 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டது. இத்திட்டமானது அரச தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மத்திய சுற்றாடல் அதிகார சபையுடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண பிரதம …