Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி

வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இதன்போது சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், […]

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி Read More »

வடமாகணத்தில் இளையோர் மத்தியில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில், சிறந்த சமூக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என அரச அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  இளையோர் மற்றும் கட்டிளம் பருவத்தினரின் தகாத செயற்பாடுகளால் சமூக மட்டத்தில் ஏற்படும்  பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார். வட மாகாணத்திலுள்ள கல்வி,

வடமாகணத்தில் இளையோர் மத்தியில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர். வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினர் , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து இந்த உறுதியை வழங்கினர். வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி Read More »

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி  – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம் பிள்ளைகள் நடப்பட்டு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன், தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர்  ஏ.வீ.கே.மாதவி

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே சவால்களை வெற்றிகொள்ள முடியும் – வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு

சவால்மிகுந்த, போட்டிதன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே கௌரவ ஆளுநர் இதனை குறிப்பிட்டார். வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும் மனைபொருளியல் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 257 மாணவிகளுக்கான

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே சவால்களை வெற்றிகொள்ள முடியும் – வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு Read More »

எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் –  யாழ்.இளவாலையில் ஆளுநர் அறிவிப்பு

இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு  இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே கௌரவ ஆளுநர் இதனை கூறினார் . இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண கௌரவ ஆளுநர்

எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் –  யாழ்.இளவாலையில் ஆளுநர் அறிவிப்பு Read More »

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர், ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட சந்திப்பு நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog, உதவி பிரதிநிதி Begona Arellano, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழாத்தினர்

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர், ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை Read More »

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வவுனியாவில் தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி கோயிலில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் அரச அனுசரணையுடன் தேசிய தீபாவளிப் பண்டிகை சம்பிரதாயபூர்வமாக நேற்று (12) கொண்டாடப்பட்டது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து தேசிய தீபாவளி பண்டிகையை ஏற்பாடு செய்திருந்தது. ​நிகழ்வில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுப்பிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை அமைச்சர் தெரிவித்தார். சமய, கலாசார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வவுனியாவில் தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இடம்பெற்றது. Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் ஜப்பான் தூதுவர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 2023.11.10 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஜப்பான் அரசின் சார்பில், வடபகுதியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதர் உறுதி அளித்தார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் ஜப்பான் தூதுவர் சந்திப்பு Read More »

வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு பயணம் வருகை.

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வடமாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் பல நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவற்றுள் வடமாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம்

வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு பயணம் வருகை. Read More »