Balasingam Kajenderan

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்.

சுமார் ஒருமாத காலமாக பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்ற இஸ்லாமிய சகோதரர்கள், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டதும், ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாகும். இந்தக் காலப்பகுதியில் வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பது மாத்திரமின்றி, இறையச்சத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் முக்கிய கடற்பாடாகும். புனித நோன்பு காலப்பகுதியில் ஏழைகளுக்கு உதவுதல், […]

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். Read More »

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுப்படுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று  (03/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்தார். சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார்

ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று மாலை (02/04/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார். “விரதம் என்பது மனதை வழிப்படுத்துகின்ற ஒரு விடயமாக மாத்திரமன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விடயமாக மருத்துவ ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மதத்திற்காக ஒருவர் தன்னை தயார்ப்படுத்தும் அதேசந்தர்ப்பத்தில் மனதை தூய்மைப்படுத்துவதோடு உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பமாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சமயங்களுமே

வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார் Read More »

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய  நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய  வவுனியா வடக்கு கல்வி வலய  வ/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன்  பிரதி சபாநாயகராகவும் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக  வடமராட்சி கல்வி வலயத்தின்  யா/ ஹாட்லி கல்லூரியின்மாணவன்  மோகன் அர்ஜுன் அவர்களும்  தெரிவாகியுள்ளனர். இந் நிகழ்வில் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர்

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024 Read More »

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்

“அவர் இறந்தார். பாவத்தை ஒழிக்க ஒரேயொருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்”  –  உரோ. 6 : 10 மானிட குலத்தை மீட்பதற்காக மனித உருவெடுத்துவந்த இறைமகன் கிறிஸ்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இந்த உன்னதமான நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர். “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தவரானார்” என்ற திருவிவிலிய வாக்கியத்திற்கு அமைய, அடிமைத்தன  ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மீட்பு, சமாதானம், சமத்துவம், அன்பு, நட்புறவு என அனைத்தையும்

கௌரவ ஆளுநரின் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் Read More »

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நேற்று  (28.03.2024) நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய கௌரவ வடக்கு மாகாண ஆளுநர், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்ப முன்னர், தமது அடிப்படை தேவைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என கௌரவ ஆளுநர் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின நிகழ்வு, மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (27.03.2024) நடைபெற்றது.

தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்திபுலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். – அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை 27.03.2024 அன்று சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், கௌரவ ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார். அத்துடன் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து  கொண்டார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்திபுலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். – அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு Read More »

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல்

 “2024 ஆம் ஆண்டு முதல் அரசாங்க பாடசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும் பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான” தேசிய திட்ட எண்ணக்கருவிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் 25.03.2024 ஆம் திகதி கொழும்பு சுஜாத்தா மகளீர் கல்லுரியில் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கு இணையாக மாகாண செயற்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் பங்குபற்றுதலுடன்  மாகாண மட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு  யா/கொக்குவில் ஸ்ரீ ஞானபண்தடித வித்தியாசாலையில் கெளரவ ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் 25.03.2024

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல் Read More »

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார்.

இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில்

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார். Read More »