Balasingam Kajenderan

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்  உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்கு குழு நியமிக்கப்படும் […]

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம் Read More »

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின்கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று நியமிக்கப்படும்

யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்  உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான குழு இன்று (01.03.2024) நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை கௌரவ ஆளுநர் அறிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்த விசேட

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின்கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று நியமிக்கப்படும் Read More »

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார். அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும்

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதி Read More »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம்

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை Read More »

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆறு மாத NVQ சான்றிதழ் மற்றும் மூன்று வருடங்களுக்கான தாதியர் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்கள் கௌரவ ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. இளைஞர், யுவதிகளுக்கு தற்போது தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம்

இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடமராட்சி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கௌரவ ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் வடமராட்சியில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு நடைபெற்றது. வடமராட்சி பிரதேசத்தில் காணப்படும் உள்ளக வீதிகள் சீரின்மை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கௌரவ ஆளுநரிடம் இதன்போது முன்வைக்கப்பட்டன. அத்துடன் விளையாட்டு மைதானம் சீரின்மை, வீதிகளுக்கான மின் விளக்குகள் பொருத்தப்படாமை, சனசமூக நிலையங்களின்

வடமராட்சி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான Cross Country Race  போட்டி கடந்த 2024.02.17 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வில் வவுனியா மாவட்ட மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உதவி பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ சரத்சந்திர அவர்கள் வீராவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race Read More »

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் போது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  “பேடகம்” மலர் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கௌரவ ஆளுநரால்  நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம்  இல்லாமை  கவலையளிப்பதாக கெளரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்தல், கிராமங்களின் உட்கட்டமைப்பு

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் போது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல் Read More »

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்! வடக்குமாகாண ஆளுநர் அறிவுறுத்தல்!

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட பிராந்திய சங்கத்தினரால் நடாத்தப்பட்ட “தொழில்நுட்ப வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா, வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. (22/02/2024) இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண  கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும், விஷேட விருந்தினராக மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன்  பந்துலசேன அவர்களும் கலந்து சிறப்பித்தனர் . நூல்வெளியீட்டின் முதற்பிரதியை வடக்கு மாகாண  கெளரவ ஆளுநர், பிரதம செயலாளருக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்! வடக்குமாகாண ஆளுநர் அறிவுறுத்தல்! Read More »