Balasingam Kajenderan

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20.06.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், நிதிகளை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும் என்றும், கௌரவ ஜனாதிபதியும் அதை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் பின்னர் […]

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவத்தை அடைவதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடானது முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் பாலின சமத்துவத்தை நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திலும் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்து பால்நிலைசார் பிரச்சனைகள், தலைமைத்துவம், வடமாகாணத்தில் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்,  சவால்கள், அது சார்ந்த வழிமுறைகளை உள்ளடக்கியதான  பயிற்சிப்பட்டறையின்

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.06.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இம்முறை அதிகளவான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். இதன் பின்னர் அமைச்சின் கீழ்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.06.2025) நடைபெற்றது. கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலர் சம்பத் மந்திரிநாயக்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார்

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (19.06.2025) கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். அவரை மாகாண ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் வரவேற்றார். சான்றுபெற்ற சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடி ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டார். அத்துடன் அங்கு மரநடுகையையும் ஆளுநர் மேற்கொண்டார். சிறுவர்களாலும், ஆணையாளராலும், பாடசாலையின் அதிபர் உள்ளிட்டோராலும் பல விடயங்கள் ஆளுநருக்கு

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். வவுனியா மாநகரசபை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். ஆளணிகளின் அவசிய தேவை தொடர்பிலும் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தார். வவுனியா மாநகருக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் கோரினார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர் Read More »

வடக்கு மாகாண  ஆளுநர்  அவர்களை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள்  சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

வடக்கு மாகாண  ஆளுநர்  அவர்களை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள்  சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 18.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும்

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் முகமாலையில் 18.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர்

முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் Read More »

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்

யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் 18.06.2025 அன்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன் முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார். வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »