வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமருக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மதியம் (02.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் கல்விப்புலத்தில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை ஆளுநர் அவர்கள் முன்வைத்தார். அத்துடன் ஏனைய சில ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு குறிப்பாக ஆசிரிய நியமனத்துக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் […]
