சேவை என்பது ஒருவரின் தேவையை நாம் முன்கூட்டியே அறிந்து செய்வதாகும். மனமிருந்தால் செய்ய விருப்பமிருந்தால் மக்கள் நலனுக்காக எதையும் செய்யலாம்.
கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை. அவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டால் இவ்வாறு செய்யமாட்டார்கள். தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே […]
