Balasingam Kajenderan

‘தர முகாமைத்துவம்: கருத்துகளிலிருந்து சான்றிதழ் வரை’ என்னும் தலைப்பிலான பயிற்சிப்பட்டறை

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருகின்றது. முதலீட்டாளர்கள் இங்கு முதலிடும்போது அவர்களுக்குரிய தொழிற்படையை – மனிதவளத்தை தயார்படுத்தவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. அதற்கான பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் சமாந்தரமாக ஏற்றுமதியை நோக்கியை தயார்படுத்தலும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை பணியாளர்களுக்கான, ‘தர முகாமைத்துவம்: கருத்துகளிலிருந்து சான்றிதழ் வரை’ என்னும் […]

‘தர முகாமைத்துவம்: கருத்துகளிலிருந்து சான்றிதழ் வரை’ என்னும் தலைப்பிலான பயிற்சிப்பட்டறை Read More »

கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களால் கண்டுபிடிப்பு

கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கள் கிழமை (23.06.2025) சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகிய தரம் எட்டில் கற்கும் மாணவர்களே மேற்கொண்டனர். கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல்

கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களால் கண்டுபிடிப்பு Read More »

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் 22.06.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இது முக்கியமான மைல்கல். இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அன்று 21.06.2025 சனிக்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு Read More »

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20.06.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், நிதிகளை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும் என்றும், கௌரவ ஜனாதிபதியும் அதை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் பின்னர்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவத்தை அடைவதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடானது முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் பாலின சமத்துவத்தை நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திலும் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்து பால்நிலைசார் பிரச்சனைகள், தலைமைத்துவம், வடமாகாணத்தில் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்,  சவால்கள், அது சார்ந்த வழிமுறைகளை உள்ளடக்கியதான  பயிற்சிப்பட்டறையின்

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.06.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இம்முறை அதிகளவான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். இதன் பின்னர் அமைச்சின் கீழ்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.06.2025) நடைபெற்றது. கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலர் சம்பத் மந்திரிநாயக்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாணத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார்

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (19.06.2025) கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். அவரை மாகாண ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் வரவேற்றார். சான்றுபெற்ற சிறுவர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடி ஆளுநர், அவர்களின் தேவைகளை கேட்டறிந்துகொண்டார். அத்துடன் அங்கு மரநடுகையையும் ஆளுநர் மேற்கொண்டார். சிறுவர்களாலும், ஆணையாளராலும், பாடசாலையின் அதிபர் உள்ளிட்டோராலும் பல விடயங்கள் ஆளுநருக்கு

அச்சுவேலியில் அமையப்பெற்றுள்ள வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் இயக்கப்படும் சான்றுபெற்ற சிறுவர் பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். வவுனியா மாநகரசபை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். ஆளணிகளின் அவசிய தேவை தொடர்பிலும் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தார். வவுனியா மாநகருக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் கோரினார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர் Read More »