யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
26.10.2023 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துல, யாழ் மாவட்ட அரச அதிபர், அரச நிறுவன அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்ககளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. மேலும் வடமாகாண மக்களுக்கான காணி விடுவிப்பு பற்றியும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் யாழ் மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தேவையான […]
