Mathuranthaki

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப் […]

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது Read More »

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள்

ஜுன் 27, 2024 அன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் ஜுலை 05 மற்றும் 09 ஆம் திகதிகளில் முறையே கிளிநொச்சி, மன்னார் மாவட்டச் செயலகங்களிலும் இரண்டாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக மட்ட அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள் Read More »

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2024

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 28.06.2024 ஆம் திகதியன்று கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகாரஅமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின்; உதவிச் செயலாளர்கள், அமைச்சின் கணக்காளர், யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து மரநடுகையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2024 Read More »

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம்

யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில்

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் Read More »

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு (16/06/2024) நடைபெற்றது. இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் (16/06/2024) நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மடு தேவாலயத்திற்கு

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்  ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.    

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது Read More »

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் இந்திய துணைத்தூதரகமும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் மகளிர் விவகார சமூகசேவைகள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலகம், மாகாண சமூகசேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் ஜெய்பூரிலுள்ள பகவான் மகாவீர் விக்லாங் சஹாயட்ட சமித்தியினுடைய தொழில்நுட்ப உதவியுடன் இம் மாகாணத்தில் இரண்டாவது தடவையாக செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் ஒன்று இம்மாதம் 04.06.2024 -20.06.2024 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட திறன்

செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 2024.05.31 ஆம் மற்றும் 01.06.2024 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். ஆண்களுக்கான போட்டி 31.05.2024 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் யாழ்ப்பாண

மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 02.06.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டிகள் அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் அரம்பமாகி மாலை 8.30 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு விளையாட்டுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துக் கல்லூரி அதிபர் அவர்களால்

மாகாண விளையாட்டு விழா – 2024 கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் Read More »