Mathuranthaki

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி வடக்கு மாகாண சபையின் வீதி பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘வீதி போக்குவரத்து நடைமுறைகளை கடைப்பிடித்து பெறுமதி மிக்க உயிர்களைக் காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இன்று 09/05/2024ம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக காங்கேசந்துறை வீதி சத்திரசந்தி வரை கவனயீர்ப்பு நடைபவனி இடம்பெற்றது. இந்நடைபவனியில் வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள், […]

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது Read More »

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு,, வவுனியா, கிளிநெச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண வர்த்தகச் சந்தை – 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024 Read More »

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு அரங்கில் 28/04/2024 அன்று  பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மன அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பதையும் கடந்து, சந்தோசம், உடல் ஆரோக்கியம்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் புதிதாக கட்டப்பட்ட சித்தமத்திய மருந்தகத்தின்  பால்காய்ச்சும் ஆரம்ப நிகழ்வு மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் 10.04.2024 ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி ஆணையாளர் இகணக்காளர்இ திணைக்கள உத்தியோகத்தர்கள், உரியகாணியின் நன்கொடையாளர்,  செல்வச்சந்நிதி ஆலய சமயப்பெரியார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இபிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்புதிய கட்டடமானது பருத்தித்துறை பிரதேச செயலக மக்களிற்கு சுதேச மருத்துவத்துறையூடாக சுகாதார சேவைகளை

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு Read More »

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு

வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டம் வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று  (16/04/2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். புத்தாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகளை கண்டுகளித்த கௌரவ ஆளுநர், பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றினார். “இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம்

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று (06/04/2024) நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில்  அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுவதாக

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான   சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (06/04/2024) விசேட நிகழ்வும், கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கௌரவ அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 2030 ஆம் ஆண்டுக்கு

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது. கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநரின் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று பதிவாகிய மூன்று சம்பவங்கள்

ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு Read More »

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள்

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024 Read More »

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக நாளை முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளன. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வை திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு

கண் சுகாதாரம்தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பம் Read More »