எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்
நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிமேதகு […]
