வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார்.
வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை காலை (01.01.2025) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என […]
