ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார்.

வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை காலை (01.01.2025) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என […]

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். Read More »

‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது

உள்ளூர் கைப்பணிக் கலைஞர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் நடத்தப்படும் ‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து 119 ஆக்கங்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் 29

‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக 01.01.2025 அன்று புதன்கிழமை காலை  ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மான சந்திப்பு Read More »

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01.01.2025 அன்று புதன்கிழமை  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதிமொழியெடுக்கும் நிகழ்வை வடக்கு மாகாண ஆளுநர் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் கொடியை வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து,

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். எங்கள் நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் – அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை வழங்குவதிலும் அரச பணியாளர்கள்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைபற்று பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச சபைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர். விளையாட்டு மைதானத்தின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. Read More »

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர்

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) கடைப்பிடிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் நிகழ்வின் தலைமை

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் 11.68 மில்லியன் ரூபா செலவில் 2018ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், 2024ஆம் ஆண்டு உலக மண் தினத்தை முன்னிட்டு கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024)கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது. Read More »

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேநாயகன் அவர்களுக்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும்

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் Read More »

மார்கழி இசைவிழா – 2024

யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடல் யாழ் வணிகர் கழகம் ஆகிய இணைந்து நடத்தும் மார்கழி இசைவிழா – 2024′ இன் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை (28.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  

மார்கழி இசைவிழா – 2024 Read More »