ஆளுநர்

இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை 27.11.2024 நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு […]

இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் Read More »

நடமாடும் சேவை ஒத்திவைப்பு

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை புதன்கிழமை 27.11.2024 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

நடமாடும் சேவை ஒத்திவைப்பு Read More »

ஹாட்லி கல்லூரியின் மாணவன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024 தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய

ஹாட்லி கல்லூரியின் மாணவன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து Read More »

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA)  மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை 25.11.2024 சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம்

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான நடமாடும் சேவை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை 27.11.2024 அன்று காலை இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை Read More »

புதிய செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலராக ஆ.சிறி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்று 24.11.2024 நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண பேரவையின் செயலராக ம.ஜெகூ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செயலாளர்கள் நியமனம் Read More »

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்க்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் (25.11.2024) ஆரம்பமாகின்றது. இப்பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத்தராதர பரீட்சை நாளை (25.11.2024) ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் தோற்றுகின்றனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட முதலிடத்தை தக்க

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து Read More »

நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை 22.11.2024 இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத்

நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை Read More »

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 22.11.2024 இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு Read More »

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் பாராட்டு விழா வலம்புரி ஹோட்டலில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை (19.11.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கட்டளைத்தளபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நினைவுச் சின்னத்தையும் கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த காலங்களில் பணியாற்றிய பலர் அதன் பின்னர்

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு Read More »