ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தால் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான காணொலி வெளியீடு மற்றும் சிவாலயங்களின் வழித்தடம் கைநூல் வெளியீடு என்பன வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (28.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் தனித்துவங்களை உள்ளடக்கி தனித்தனியான காணொலி மற்றும் மாகாணத்தின் ஈர்ப்புள்ள ஒவ்வொரு துறைகள் தொடர்பான காணொலி என்பன வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கிலுள்ள முக்கிய 27 சிவாலயங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தொகுக்கப்பட்டு […]

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர்

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த நலன்விரும்பிகளால், வட இலங்கை சர்வோதய குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு வெள்ளிரும்பிலான குடிதண்ணீர் பவுசர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28.12.2024) புங்குடுதீவு புஸ்பா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர் Read More »

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா

டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை (28.12.2024) இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர்

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா Read More »

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்

தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார் Read More »

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (27.12.2024)

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு Read More »

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப் பாராட்டினார். வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின் மணிவிழாவும் சேவைநயப்பும் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் 27.12.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு Read More »

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர் Read More »

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

நெல் அறுவடைக்கு முன்னர் விலை நிர்ணயத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய விவசாய அமைப்புக்கள் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் வடக்கிலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆளுநர், அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »