வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் 11.12.2024 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். ‘தமிழர்களுக்கு என்று தனிச் சிறப்பான […]
