ஆளுநர்

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார்

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர்  வியாழக்கிழமை காலை (19.12.2024) கலந்துரையாடல் நடத்தினர். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர். மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு […]

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்தார் Read More »

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்கு கேட்காதநிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்

‘தர்மம்’ அமைப்பின் ஏற்பாட்டில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் 18.12.2024 அன்று புதன்கிழமை காலை  இடம்பெற்றது. இலங்கையில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும் அரச நிறுவனங்களை இலகுவாக அணுகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்ட இந்த நிகழ்வில், இது தொடர்பான கோரிக்கை மனுவும் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்

ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்கு கேட்காதநிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார் Read More »

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருடன் ஆளுநர் கலந்துரையாடல்

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் 17.12.2024 அன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் மூத்த உதவிச் செயலர் திருமதி அ.சாந்தசீலன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்திரண, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிஸர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும், கண்காட்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 16.12.2024 அன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காட்சியை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸர்லாந்தின் பிரதித்தூதுவர் ஒலிவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூதுக்குழுத் தலைவர் சப்பாஸ், யாழ்ப்பாணப்

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

டிசெம்பர் 2024 க்கான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை  மீன்பிடி, நீர்வாழ் உயிரின மற்றும் கடல் வள அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், இ.அருச்சுனா, ச.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் திணைக்களத்

டிசெம்பர் 2024 க்கான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Read More »

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 13.12.2024 அன்று  வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களை விரைந்து திணைக்களங்கள் தயாரிக்கவேண்டும் எனவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆகியனவற்றின்

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் Read More »

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்

போர் முடிந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், தேசிய உற்பத்திக்கு குறைந்தளவு பங்களிப்புச் செய்கின்ற நிலைமையிலேயே எமது மாகாணம் இருக்கின்றது. அதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  புதன்கிழமை (12.12.2024) காலை, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும் Read More »

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில்  வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றது. பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்,

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் (ITEC Day) யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் 11.12.2024 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்கு பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்

யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு 11.12.2024 அன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை நிகழ்நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல் Read More »