மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து வாழ்த்தும் கௌரவிப்பு விழா
நேர்மை – வெளிப்படைத்தன்மை – எளிமை இவையே சிற்றம்பலம் ஐயாவின் அடையாளங்கள். அவரை முன்மாதிரியாகக்கொண்டு இளையவர்கள் அவரின் வழித்தடத்தை பின்தொடரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் 17.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. விழா நாயகன் மற்றும் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் […]
