ஆளுநர்

15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை (24.01.2025) ஆரம்பமானது. ரில்கோ விடுதியில் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு […]

15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி Read More »

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு Read More »

நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம் – வட மாகாண ஆளுநர்

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டம் முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாலை (22.01.2025) இடம்பெற்றது. ‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், எதிர்வரும் 03.02.2025 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர், பாடசாலை மாணவர்கள், திணைக்களப் பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம்

நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம் – வட மாகாண ஆளுநர் Read More »

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் – வட மாகாண ஆளுநர்

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார் வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை (22.01.2025) இடம்பெற்றது. பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின்

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தலைமையிலான வடக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நகர அபிவிருத்திக்கான மூத்த விசேட அதிகாரி போஹரம் ஷ தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர். வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கான

உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்ப்பான கலந்துரையாடல்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் (21.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்ப்பான கலந்துரையாடல் Read More »

தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு ஆளுநர் பாராட்டு

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுமருத்துவமனைப் பணிப்பாளர்கள், ஆதார மருத்துவமனைப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  செவ்வாய்க்கிழமை காலை

தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு ஆளுநர் பாராட்டு Read More »

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடும் முறைமையை நீக்க விவசாயிகள் ஆதரவளிக்கவில்லை

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 10.01.2025 அன்று ஆளுநருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அறிக்கையிட்டிருந்தார். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாலும் எமது மாகாண சபைக்கு

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடும் முறைமையை நீக்க விவசாயிகள் ஆதரவளிக்கவில்லை Read More »

இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை

01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார். போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (17.01.2025)

இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை Read More »

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில், ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில், ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (17.01.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரால் எஞ்சிய வேலைகளை முடிக்க முடியாத சூழலில் புலம்பெயர் தேசத்திலுள்ள சில ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து அதனை முடித்து வழங்கியுள்ளன. இதனை வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில், ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு Read More »