வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (30.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோ, முதல் தடவையாக இங்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். கடந்த காலங்களில் மாவட்டச் செயலராக இருந்தபோது ஐ.ஓ.எம். உடன் […]
