ஆளுநர்

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (25.02.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், […]

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார்.

எங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நாம் மனதார இறைவனை வேண்டினால் நிச்சயம் எங்களுக்குப் பலன் கிடைக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் ஏற்பாடு செய்த, மகிமை வாய்ந்த 12 ஜோதிலிங்க குலங்களில் முதன்மையானதாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஜோதிலிங்க வழிபாடு நேற்று திங்கட்கிழமை காலை (24.02.2025) யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார். ‘மற்றையவர்களுக்கு

யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார். Read More »

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது.

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில்  அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது. Read More »

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை

விவசாய இரசாயன வெற்றுப் போத்தல்கள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வும், வாகனப் பேரணியும் 24.02.2025 திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. Crop life நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்களின் அனுசரணையுடன் பிரதி விவசாய பணிப்பாளர் – யாழ்ப்பாணம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பதிவாளர் – பீடைகொல்லி கட்டுபாட்டு

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எமது சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் காலத்தின் தேவைகருதி அவர் ஆரம்பித்த தினக்குரல் பத்திரிகை சமாதான காலத்தில் யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் வெளிவரத் தொடங்கியது. பிராந்திய ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த வடக்கு மண்ணிலிருந்து ஏற்கனவே வெளிவந்த பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மேலதிகமாக

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி Read More »

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயரின் திருப்பொழிவுத் திருவழிபாடு

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருள் தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் திருப்பொழிவுத் திருவழிபாடு இன்று சனிக்கிழமை காலை (22.02.2025) மடுத் திருத்தலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு மற்றும் திருப்பலி என்பன இடம்பெற்றன. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தொடர்பில் வெளியிடப்பட்ட நூலும், ஆளுநரிடம் இதன்போது

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயரின் திருப்பொழிவுத் திருவழிபாடு Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் -வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகக சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது. ஒரு சில அழகக நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இன்றைய கூட்டம்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் , வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் தனித்தனியே சந்தித்து இன்று வெள்ளிக்கிழமை காலை (21.02.2025) கலந்துரையாடினர். கொடுப்பனவுகளை அதிகரித்தல், இடமாற்றங்கள்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவு மற்றும் மாந்தைமேற்கு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு புதன்கிழமை 19.02.2025 களப்பயணம் மேற்கொண்டு மக்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது மக்களால் பல்வேறு விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைஇலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு மடு பிரதேச செயலர்

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம் Read More »

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர் Read More »