இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (25.02.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், […]
