ஆளுநர்

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஆளுநர் வழங்கினார்

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் 05.03.2025 அன்று புதன்கிழமை  மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் […]

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஆளுநர் வழங்கினார் Read More »

நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05.03.2025) பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஆளுநர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்தார். இதன்போது மாவிலித்துறை – பெரியதுறை வீதியில் ஒரு பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதி மிகமோசமாக பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார் Read More »

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு 02.03.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். ‘நூலாசிரியர் கேதீஸ்வரன் எனது ஊரவன். அவரும் நானும் ஒரே பாடசாலையில் (தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி) கல்வி பயின்றவர்கள். கலைவித்துவான்கள் பலரையும் கொண்டது எங்கள் அளவெட்டி மண். இடப்பெயர்வால் அவை எல்லாம்

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு Read More »

நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் 5 அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சுக்களின் கீழான அனைத்துத் திணைக்களங்களின் தலைவர்களும், அதற்கு மேலதிகமாக மத்திய அரசின் கீழான இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், தேசிய நீர்

நடமாடும் சேவை 05.03.2025 அன்று புதன்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. Read More »

யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார். ஆளுநரை, திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி எஸ்.மாலதி, பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். Read More »

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களமும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் சமூகப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழா 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அருகில் நடைபெற்றது. நிலையத்தின் பெயர் பலகையை ஆளுநர் திரை நீக்கம் செய்து

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் பிரிவுகளும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இன்னமும் காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினரின் வேலி பின்நகர்த்தப்படாமையால் இவ்வாறான சூழல் நிலவுகின்றமை தொடர்பில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன்

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். Read More »

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 27.02.2025 அன்று வியாழக்கிழமை கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். கைத்தொழில்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். நீர் விநியோகம் இன்மை மற்றும் முன்னறிவித்தல் இல்லாத மின்தடை காரணமாக பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் சில தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்குபவர்களை பழக்குவதற்கு இந்தியாவிலிருந்தே ஆட்களை வரவழைக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதில் தாமதம் நிலவுவதாகவும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அச்சுவேலி

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். Read More »

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதனை அனைத்துத்தரப்புக்களும் இணைந்து முன்கொண்டு செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கொள்கை வரைவை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.02.2025 அன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரும், இந்த

‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தொடர்பான கலந்துரையாடல் Read More »