ஆளுநர்

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் – வடக்கு மாகாண ஆளுநர்

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இதன்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வடைவதுடன், விவசாயம் எமது சமூகத்தில் மதிப்பு மிக்க தொழிலாகவும் மாற்றமடையும் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தெரிவித்தார். இமை ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘இமை ஊடக வெற்றிப்படி’ நிகழ்வு உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்றது. இதன்போது விவசாயிகள், கலைஞர்கள், மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த […]

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (07.02.2025) இடம்பெற்றது. தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் கல்விச் சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றிருந்தன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகாரிகளால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பிலும், எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாகவும் அவற்றை

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார். 2000ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் கால்நடை வைத்திய அலுவலகங்களில் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும், அந்த நடைமுறை சில காரணங்களால் பின்னர் நிறுத்தப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பெரும்பாலான மாகாணங்களில் இன்றும்

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை Read More »

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு

2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்துக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 07.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை  இடம்பெற்றது. ஒவ்வொரு அமைச்சுக்கள் அதன் கீழான திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள நிதி விவரங்கள் மற்றும் அந்த நிதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்தின் திட்டமிடல் – பணிப்பாளர் கே.சிவசந்திரன் தெரியப்படுத்தினார்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு Read More »

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் முத்துவிநாயகர்புரத்தில், முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் (Mullai Agri Business Ltd) நிறுவனத்தில் வியாழக்கிழமை (06.02.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கம் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் ஆக மாற்றப்பட்டு விவசாயிகள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் உற்பத்திகள்

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

இடம்பெயர்ந்த மக்களின் வலி , வேதனை எனக்குத் தெரியும் – வடக்கு மாகாண ஆளுநர்

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை மாலை (05.02.2025)

இடம்பெயர்ந்த மக்களின் வலி , வேதனை எனக்குத் தெரியும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவமனைப் பணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (05.02.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதன் அவசியத்தை போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். அத்துடன் ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய மருத்துவமனைகளுடன் ஆளணிகளை ஒப்பிட்டு போதனா மருத்துவமனைக்கான ஆளணியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் , உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார். ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் போரின் பின்னர் அவ்வாறான செயற்பாடுகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் போருக்கு முன்னர்

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் , உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை திங்கட்கிழமை (03.02.2025) முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க, யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா ஆகியோரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டாம்

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. Read More »

மக்களின் மனங்களில் – எண்ணங்களில் – நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை காலை (03.02.2025) யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று அந்தப் பகுதிமக்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பது அதன் ஓர் அலகுதான். 1970ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தூய்மையான மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. அன்று பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை குறைவாக

மக்களின் மனங்களில் – எண்ணங்களில் – நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »