ஆளுநர்

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 13.03.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் […]

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு Read More »

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் 12.03.2025 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், கலாசார நிகழ்வுகளும் அரங்கில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர்,

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. Read More »

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி இல்லாமல் எதுவுமில்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆலோசனை கூறினார். கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர், பாடசாலைக்கு வருவதற்கான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார். அதேபோல பாடசாலைக்கு அருகிலுள்ள

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு பெருந்தொகை வேலை வாய்ப்பு

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது.

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

எமது மாகாணத்துக்கு தென்மாகாணங்களிலிருந்து வரும் சிங்கள ஆசிரியர்களும் இடமாற்றங்களைக் கோருகின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலைமை நீடிக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு கற்கும் மாணவர்கள் இந்தப் பிரதேசத்துக்கே ஆசிரியர்களாக வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள போகஸ்வெவ மகா வித்தியாலத்தில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி 12.03.2025

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் திடீர்ப் பயணம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 12.03.2025 அன்று புதன் கிழமை திடீர்ப் பயணம் மேற்கொண்டார். பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலையில் 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட கட்டடம் இன்னமும் நிறைவுறுத்தப்படவில்லை என பாடசாலைச் சமூகத்தால் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக வேறு அபிவிருத்தி உதவிகளும் கிடைக்கவில்லை எனவும்

அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் திடீர்ப் பயணம் Read More »

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை சாரதிகள் சங்கத்தினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். இதன்போது, வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் சுகாதாரத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சாரதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம்

‘1924’ என்ற ஹொட்லைன் இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்த தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண தெரிவித்தார். அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணமே சிறப்பாகச் செயற்படுகின்றது எனவும் பாராட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்,

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம் Read More »

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், நாச்சிமார்கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »