முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில் புதன்கிழமை (12.02.2025) ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், எனது தந்தையார் நாகலிங்கம் அவர்கள் தந்தை செல்வா அவர்களுடனும், அமிர்தலிங்கம் அவர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங்கம் அவர்கள் நேர்மையானவர். மக்களால் இன்றும் மதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. அமிர்தலிங்கம் அவர்களதும் அவரது பாரியார் மங்கையர்கரசி அம்மையாரதும் பேச்சுக்களைக் கேட்டபதற்காக சிறுவயதில் கூட்டங்களுக்கு சென்றமை […]
