கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல்
கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இன்றைய இளையோர் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றது. இளையோருக்கு பொழுதுபோக்குவதற்கான நேரமும் குறைவாகவுள்ளதுடன் அவர்களுக்கு பொழுதுபோக்குக்கான இடவசதிகளும் இல்லை. பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்கள் என்று ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்கள் […]
