ஆளுநர்

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை 21.05.2025 முதல் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறுஆளுநர் பணிப்புரை

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை 21.05.2025 அன்று புதன்கிழமையிலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறும் அதை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். 10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையடுத்து அது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் […]

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை 21.05.2025 முதல் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறுஆளுநர் பணிப்புரை Read More »

எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு

பிள்ளைகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் வழங்குவது சிறப்பானது. அதுவும் என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கி பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றமை உண்மையில் பாராட்டப்படவேண்டியதே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி நிலையத்தில் 20.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ்

எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், வடக்கு கடற்படைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (19.05.2025) மு.ப. 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், வடக்கு கடற்படைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு Read More »

மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து வாழ்த்தும் கௌரவிப்பு விழா

நேர்மை – வெளிப்படைத்தன்மை – எளிமை இவையே சிற்றம்பலம் ஐயாவின் அடையாளங்கள். அவரை முன்மாதிரியாகக்கொண்டு இளையவர்கள் அவரின் வழித்தடத்தை பின்தொடரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் 17.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. விழா நாயகன் மற்றும் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன்

மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து வாழ்த்தும் கௌரவிப்பு விழா Read More »

வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் வெலிஓயா மகாவலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, வெலிஓயா பௌத்த பேரவை, வெலிஓயா பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச சபை, மகாவலி அதிகார சபை மற்றும் பிரதேச அரச திணைக்களங்கள், பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நடத்திய வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் வெலிஓயா மகாவலி விளையாட்டு மைதானத்தில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு

வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் வெலிஓயா மகாவலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது Read More »

2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு

இளையோர் விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும் என விருதைப் பெற்ற இரண்டு இளைஞர்களும் கூறிய வார்த்தைகள் காதில் இனிக்கின்றன. இவர்களைப் போன்ற ஆயிரம் இளையோர் இருந்தால் போதும் எங்களது மாகாணம் வளர்ச்சியில் எங்கேயோ சென்றுவிடும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழிற்துறையில் சவால்களை கடந்து சாதனை படைத்துவரும் முயற்சியாளர்களை

2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு Read More »

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இதன்போது நன்கொடையாளர் ஒருவரால் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார். இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்புப் பயணம் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் குறிப்பிட்டார். இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சவால்கள் முதலில் ஆராயப்பட்டது. விடுதி தேவை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் Read More »

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 14.05.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. ஆனால் அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. வடக்கிலிருந்து சிலர் ஏற்றுமதிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் மூன்றாம் தரப்பு ஊடாகவே ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஏற்றுமதியை

மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் – சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள். தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ 13.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது Read More »