ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் தமிழ்ச் சைவப்பேரவையினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தச் […]

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது.

நான் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் து.யேசுதானந்தர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025)

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது. Read More »

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம்

முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் அவர்களை, பாடசாலை அதிபர் வரவேற்றதுடன் பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார். யோகபுரம் மகாவித்தியாலயத்தில் மிகப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள மரம் நடுகை மற்றும் தென்னங்கன்றுகள் நடுகை ஆகியனவற்றை ஆளுநர் பார்வையிட்டதுடன், இந்தச் செயற்பாட்டுக்காக பாடசாலைச் சமூகத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் Read More »

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள். அந்த மரங்களை வளர்ப்பதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப்பற்றிச் சிந்திக்காமல் இவ்வாறு அசிரத்தையாகச் செயற்படுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் மின்வடங்களுக்கு பாதிப்பு எனத் தெரிவித்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மிகமோசமான முறையில் வெட்டப்படுகின்றமை தொடர்பிலும் அந்தக்

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

உலகவங்கிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

கௌரவ ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உலக வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். அத்துடன் விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் மூன்றாம் தரப்பு ஊடாக ஏற்றுமதி செய்யப்படுவதால் உற்பத்தியாளர்கள் உரிய இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். சிறு கைத்தொழில்துறை

உலகவங்கிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்களை தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்குமாறும், மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நிறுவனமாக மாற்றும் வகையில் செயலாற்றுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். தெருமின்விளக்குகள் பொருத்துவதில் இலங்கை மின்சார சபையுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. அதில்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே தென்பகுதிக்குச் செல்கின்றன. அவற்றை முடிவுப்பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. யுனிடோ நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம்

வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை – ஆளுநர்

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில் உறுதியளித்திருந்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக அறிவுறுத்தினார்.

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல்

பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் – கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்

வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (21.05.2025) ஆரம்பித்து வைத்தார்.இன்று தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய ஆளுநர், வாசிப்பே மனிதனை முழுமையடையச் செய்கின்றது. எனவே பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக எங்கள் அறிவுத் தேடலை

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »