கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையம் தொடர்பில் தேவையற்ற வதந்திகள் பரப்படுகின்றன. இந்த மருத்துவமனையை முழு வீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்தின் பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான […]
