மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர்
மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையத்தை ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான ஒழுங்குகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது. அதற்கான சாத்தியமான வழிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாங்குளத்திலுள்ள வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் தலைமை […]
