காரைநகர் சீநோர் படகுத்தளத்தினை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். – ஆளுநர்
வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் நிச்சயம் இது நடக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு காரைநகர் சீநோர் படகுத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025) இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரும் […]
