“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை உயர்த்தி, சுயதொழில் முயற்சியாளர்களை நேரடி ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சர்வதேச சந்தையில் போலிப் பொருட்களால் பாதிப்படைந்துள்ள ‘யாழ்ப்பாணம்’ எனும் எமது தனித்துவமான வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, எமது உற்பத்திகளைத் தனித்துவத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, தேசிய ஒருமைப்பாட்டு தின […]
