ஆளுநர்

சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் வள ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணம் […]

சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை காலை (29.12.2025) ஆளுநர் கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம் Read More »

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்

வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த முறையான ஆய்வும் மதிப்பீடும் அவசியமென வடக்கு மாகாணத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (27.12.2025) மாலை, 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களாலும், அவற்றின்

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார் Read More »

இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக்

இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்து செல்லும் இந்த ஆண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக இருந்தபோதிலும், ‘டித்வா’ புயல் ஏற்படுத்திய எதிர்பாராப் பேரிடரால் எமது அபிவிருத்திப் பணிகள் பெரும் சவாலை சந்தித்தன. இருப்பினும், இப்பாதிப்புகளை ஈடுசெய்து, பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26.12.2025) மாலை

பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். Read More »

கண்ணீரைத் துடைத்து கரம் கோர்ப்போம்: சூழல் காத்து எளிமையாக கொண்டாடுவோம் – வடக்கு ஆளுநரின் கிறிஸ்மஸ் செய்தி

உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் நத்தார் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமாக கிறிஸ்மஸ் என்றாலே குதூகலமும், கொண்டாட்டமும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை எமது நாடும், எமது மாகாணமும் பெரும் சோகத்தைச் சுமந்து நிற்கிறது. அண்மையில் நம்மைத் தாக்கிய ‘டித்வா’ புயல், நம் மண்ணில் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அந்தப் பேரிடரில் தங்கள் உயிர்களையும், உறவுகளையும், வாழ்நாள் சேமிப்பான உடமைகளையும் இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் கண்ணீரை கவனிக்காது

கண்ணீரைத் துடைத்து கரம் கோர்ப்போம்: சூழல் காத்து எளிமையாக கொண்டாடுவோம் – வடக்கு ஆளுநரின் கிறிஸ்மஸ் செய்தி Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தை, வட மாகாணத்தில் வினைத்திறனாகவும் ஒருங்கிணைந்தும் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24.12.2025) புதன்கிழமை, வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், மாவட்டச் செயலாளர்கள், மாகாண, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் நேரடியாகவும்

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது. Read More »

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கிலேயே பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தரச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கான மாகாண நிர்வாகத்தின்

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். Read More »

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது.

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, டான் தொலைக்காட்சி குழுமத்தின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை (23.12.2025) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அவர்கள் அஞ்சலிச் சுடரை ஏற்றி

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது. Read More »

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுடன் இணைந்து உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலமே இத்திட்டங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். Read More »