முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும்
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் முகமாலையில் 18.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் […]