ஆளுநர்

“போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு”

வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு […]

“போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு” Read More »

குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் எனவும் குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக

குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி அவர்களும் இணைந்து கொண்டார். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்தியத்

இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் Read More »

கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுண்டாய் குடியேற்ற கிராமமும் ஏனைய இடங்களைப்போல சகல வசதிகளையும் பெற்று எழுச்சியுற்ற கிராமமாக மாறவேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில், சி.தர்மகுலசிங்கம் மற்றும் அ.யோகராஜா ஆகியோரின் அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் ஊடாக கட்டப்பட்ட கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை (05.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்து

கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது

Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (04.09.2025) வியாழக்கிழமை காலை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு Read More »

விவசாயிகளின் தேவைகளை தேடிச்சென்று இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும் – ஆளுநர்

இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்

விவசாயிகளின் தேவைகளை தேடிச்சென்று இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும் – ஆளுநர் Read More »

திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் சேவையாற்றுதல் வேண்டும் – ஆளுநர்

பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும். அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏனைய செயலாளர்களும் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர்

திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் சேவையாற்றுதல் வேண்டும் – ஆளுநர் Read More »

அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை (03.09.2025) நடைபெற்றது. நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகருடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தார். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பார்வையிட்டனர். நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. Read More »

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் தலைமையில் முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தி முன்னெடுக்கும் நோக்கத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.09.2025) நடைபெற்றது. ஜக்கிய நாடுகள் தொழில்த்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டுமான அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் தலைமையில் முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் நடைபெற்றது. Read More »