ஆளுநர்

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர்

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு முதன்முறையாக வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களை சேர்ந்த சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் தொடர்பிலான கூட்டம் 04 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் , இந்த நிகழ்வின் முதற்கட்டமாக வீதி […]

முதன்முறையாக வடமாகாணத்தில் அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை – ஆளுநர் Read More »

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை இருக்கவேண்டும் . நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கார்கில்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கான கார்கில்ஸ் சாரு பிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித்தொகை வழங்கும் 2018 -2019 நிகழ்வு 04 ஒக்ரோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் இடம்பெற்றறது.

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர் Read More »

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதியில் வர்த்தமானி அறிவித்தலின் படி காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதினால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் 03 ஒக்ரோபர் 2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவத்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவதந்தனர். ஆனாலும்

நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03 ஒக்ரோபர் 2019 அன்று நடைபெற்றது. அதன் பின்னர் பிரச்சினை காணப்படும் குறித்த பிரதேசத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை ஆளுநர் மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் போது 1984இற்கு முன்னர் இந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் போர் காரணமாக நீண்டகாலம் இடம்பெயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் Read More »

கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டம் கணுக்கேணி கிராமத்தில் குழாய்க்கிணறு மூலமாக நீரினை அதிகளவில் இராணுவத்தினர் பயன்படுத்துவதால் அந்தப் பிரதேசத்தில் நிலத்தடி நீர் குறைவடைந்து வருவதாக பிரதேச மக்களினால் ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03 ஒக்ரோபர் 2019 அன்று இடம்பெற்றது. இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து

கணுக்கேணி குழாய்க்கிணறு குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

அத்தாய் பிரதேச விவசாயிகளுடன் கௌரவ ஆளுநர் சந்திப்பு

பூநகரி அத்தாய் பிரதேசத்தில் பெரும்போக நெற்செய்கைக்காக நெல்விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் சிலரை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (03) காலை சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்தாய் பிரதேச விவசாயிகளுடன் கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம்  – ஆளுநர்

போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன. அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை உருவாக்கிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பினை கௌரவிக்கும் முகமாக கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் 02 ஒக்ரோபர் 2019

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம்  – ஆளுநர் Read More »

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் ‘வடக்கு வட்டமேசை’ (”Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் 03 ஒக்ரோபர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்லும்வகையில் கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்‘ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பிலான கருத்துக்களை தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’ Read More »

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (01)காலை நேரில் சென்று ஆராய்ந்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு Read More »

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இதன்போது பல

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை Read More »