ஆளுநர்

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மதசுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் திரு அகமட் சாஹிட் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 17 ஆகஸட் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர்

கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 17 ஆகஸ்ட் 2019 அன்று ஏற்பாடுசெய்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – ஆளுநர் Read More »

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அடிப்படையாக இருக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் வேண்டும். பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் எப்போதும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடக்கிற்கான சர்வதேச நீர்வள மாநாட்டிற்கான இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் அவர்கள் தலைமையில் 16 ஆகஸ்ட் 2019 அன்று மாலை இடம்பெற்றது. 2030 ஆம் ஆண்டளவில் எமக்கு குடிநீர் தேவையாக தண்ணீரீன்

பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது – ஆளுநர் Read More »

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏ9 வீதியில் பயணிக்கும் யாழ் – கொழும்பு மற்றும் கொழும்பு – யாழ் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் நலன்கருதி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் சுமார் 50 பேரூந்துகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு- ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன்  அவர்களுக்குமிடையிலான சந்திப்பு (09) இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் Mr.Riccardo Chelleri, Mr.Hans

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு- ஆளுநர் சந்திப்பு Read More »

2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு ஆரம்பமானது.

தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் . எனவே வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ்

2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு ஆரம்பமானது. Read More »

வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் நாளை மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு வட்டமேசை (‘#Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நாளை மறுதினம் (08) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் “வட மாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்” தொடர்பில் இம்முறை கலந்துரையாடப்படவுள்ளது. மாதம் இருமுறை இடம்பெறும் இந்த ‘வடக்கு

வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் நாளை மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. Read More »

கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இன்று (06) இடம்பெற்றது. டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக வட மாகாணத்தினை மாற்றிடும் தேசிய குறிக்கோளினை அடைவதே இதன் நோக்கமாகும். இந்த திட்ட வரைபில் ஸ்மாட் பாதுகாப்பு , ஸ்மாட் அரசாங்கம், ஸ்மாட் சுகாதாரம்,ஸ்மாட் கட்டடம், ஸ்மாட் பாவனைகள் , ஸ்மாட் பணம், ஸ்மாட் கல்வி , ஸ்மாட் தொழிலாளர்கள் , ஸ்மாட்  போக்குவரத்து

கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு Read More »

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (06) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில்

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு (MDTC) நேற்று (05) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »