ஆளுநர்

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மிக பிரமாண்டமாய் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் புத்தகத்திருவிழாவின்  இறுதி நாளான இன்று இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது. இறுதி நாளான இன்று ஓவியப்போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட ஐவருக்கும் மற்றும் அதிஸ்டப்பெட்டியில் […]

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம்

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் 31 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெற்றது . இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் தெரிவிக்கையில், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே இருக்கின்ற மக்களை திரும்பவும் வாழவைப்பதற்காகவும், வருகின்ற சந்ததியின் ஆரம்பகல்வியை உங்கள் கைகளில் இந்த

ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம் Read More »

யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பான ஊடக அறிக்கை

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான

யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பான ஊடக அறிக்கை Read More »

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இந்த புத்தகத்திருவிழாவில் அதிகளவு வாசகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலை

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை Read More »

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு

மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 27 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமாகவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு Read More »

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 26 ஆகஸ்ட் 2019 அன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian ஒருங்கிணைந்த மோதல் பகுப்பாய்வு செயல்முறை ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா “தொட்டணைத்தூறும் மணற்கேணி”  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் 23 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர்

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘வடக்கு வட்டமேசை’ (‘‘Northern_Province_Round_Table’’) கலந்துரையாடல் நாளை (22) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் இம்முறை ‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நுண்கடன் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ Read More »

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து 19 ஆகஸ்ட் 2019 அன்று உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள் , உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள்

சங்கானை பிரதேச உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »