ஆளுநர்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலரை கடந்த வரம் (ஒக்.31) லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார். வடமாகாணத்தில் முதலாவது தமிழ் ஆளுநராக, வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு முன் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் , கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் , வடமாகாணத்தை மேலும் அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அவர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இதன்போது தெரிவித்தார். […]

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு Read More »

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் 05 நவம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம் , வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் , மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு Read More »

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர்

விவசாயத்தில் வளர்ச்சியடைந்துள்ள மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சியும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலும் நிகழ்வு 31 ஒக்ரோபர 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் பொதுநூல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் ஊடாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு ஆளுநர் அவர்கள்

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர் Read More »

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்

லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 31 ஒக்ரோபர் 2019 அன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை சந்தித்தார். ஆலயத்தின் நிர்வாக சபையினர் இலங்கையின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ஆளுநர் அவர்கள் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

கௌரவ ஆளுநர் -பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் Mr.Fergus Auld OBE அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (ஒக்.30) லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது    வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த கௌரவ ஆளுநர் அவர்கள்,  பல சவால்களுக்கு மத்தியில் இதனை

கௌரவ ஆளுநர் -பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் சந்திப்பு Read More »

கனடா வாழ் தமிழ் வணிக சமூகம் – ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மற்றும் கனடா வாழ் தமிழ் வணிக சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ரொரன்டோ நகரில் 25 ஒக்ரோபர் 2019 அன்று இடம்பெற்றது . வடமாகாணத்தில் தான் ஆளுநராக பதவியேற்றதிலிருந்து முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கனடா வாழ் வணிக சமூகத்திற்கு கௌரவ ஆளுநர் அவர்கள் விளக்கமளித்தார். வடமாகாணத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பிலும் இதன்போது தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை

கனடா வாழ் தமிழ் வணிக சமூகம் – ஆளுநர் சந்திப்பு Read More »

நாளை மறுதினம் ‘வடக்கின் தங்க குரல்’ இறுதிச்சுற்றுக்கான தெரிவு

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாணத்திலுள்ள இசையார்வலர்களை ஊக்குவிக்கும் முகமாக விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வடக்கின் தங்க குரல் தேடல் 2019 போட்டியின் நான்காம் கட்ட சுற்று எதிர்வரும் சனிக்கிழமை (26) யாழ் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடந்த ஐந்தாம் திகதி இயக்குனர் இமயம்

நாளை மறுதினம் ‘வடக்கின் தங்க குரல்’ இறுதிச்சுற்றுக்கான தெரிவு Read More »

ஆளுநருக்கும் லண்டன் நகர பிதாவும் இடையிலான சந்திப்பு

லண்டன் போரோ ஒப் ப்ரன்ற் இன் நகரபிதா ஏர்னஸ்ற் எசாயாயுகி அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (ஒக்.21)லண்டனில் இடம்பெற்றது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநருக்கும் லண்டன் நகர பிதாவும் இடையிலான சந்திப்பு Read More »

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு

லண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிறு (ஒக்.20) முற்பகல் லண்டனில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின்  கல்வி ,சுகாதாரம் ,விவசாயம் ,இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு Read More »

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 21 ஒக்ரொபர் 2019 அன்று முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. லண்டனுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் , அதற்கு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உதவ வேண்டுமென்றும் ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »