ஆளுநர்

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமாகிய 15 ஜனவரி 2020 அன்று யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். காலை பதினொன்று முப்பது மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கான துணைத்தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி,கலாசாரம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன் […]

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து

குளிரும் இருளும் மிகுந்த மார்கழி மாதத்துக்குப் பின்னர், புதிய முயற்சிகளைத் தொடங்கும் மங்கலம் மிகுந்த மாதமாக தை அமைகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மக்கள் நம்புகின்றார்கள். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக அமைவது. விளைந்த நெல் வீட்டுக்குக் கொண்டுவந்து களஞ்சியப்படுத்தப்படும். புது நெல் பொங்கலுக்கு தயாராகிவிடும். தை மாதத்தில் இப்பொங்கல் நடைபெறுவதால் “தைப்பொங்கல்” எனப்படுகின்றது. தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து Read More »

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வீண் வததந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதை அவதானித்த வடக்கு

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடல்  வட மாகாண ஆளுநர் திருமதி. பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 09 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண மக்களுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீள்நிலைநாட்டிக் கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும் தூர நோக்கும் அர்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய்நாட்டிற்கு  தற்போது தேவையாகவுள்ளது. இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள் Read More »

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது. 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர்

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் உலகளாவிய ரீதியில் ஹோட்டல்களை நடத்திவரும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.ஜி.எம்.ஆனந்த் அவர்களை 11 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் சந்தித்தார். சுற்றுலாத்துறையில் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக உலகளாவிய ரீதியில் திகழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தினை வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு மேற்கொள்வதற்கு கௌரவ ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார்.  

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு Read More »

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு கௌரவ ஆளுநர் விஜயம் செய்து இயக்குனர் பாரதிராஜாவுடன் சுமூக கலந்துரையாடலை மேற்கொண்டார். வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு Read More »

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் அவர்கள் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும்

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று பயணமாகவுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.    

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர் Read More »