ஆளுநர்

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04 மார்ச் 2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர் , விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், “ விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால […]

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம்

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் என்பன 25 பெப்பிரவரி 2021 அன்று காலை 9 மணிக்கு ஜெட்விங் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் Read More »

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான்

ஒரு கிராமம் ஒரு வங்கி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் கிராமத்தின் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச சபையில் 16 பெப்பிரவரி 2021 அன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம் சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர்,

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான் Read More »

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

உலக வங்கியின் அனுசரணையோடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் 1000 மெற்றிக்தொன் களஞ்சியசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கூழாமுறிப்பு எனும் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலே 16 பெப்பிரவரி 2021 அன்று  இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா Read More »

சௌபாக்கியா கடன்திட்டம் 2021

அரசாங்கத்தின் சௌபாக்கியா இலகு கடன் திட்டத்திற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட எட்டு பலநோக்கு சங்கங்களுக்குரிய கடன் வழங்கும் திட்டம் 13 பெப்பிரவரி 2021 அன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள்இ வரலாற்றில் முதற்தடவையாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு நெற்கொள்வனவு செய்வதற்காக பெரியளவு தொகை மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சௌபாக்கியா கடன்திட்டம் 2021 Read More »

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும்

கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சஷீந்திர ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து நடத்தும் வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் மற்றும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையில் 15 பெப்பிரவரி 2021 அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ

வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் Read More »

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது

“சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைக்கு அமைவாக “உழைக்கும் நாடு, உற்பத்தி செய்யும் குடிமகன், மகிழ்சியான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் 200 பற்றிக் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட “பற்றிக் பயிற்சி நிலையம் -புங்குடுதீவு யாழ்ப்பாணம்” திறப்புவிழா மற்றும் ஆரம்ப நிகழ்வு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் பாராளுமன்ற

பற்றிக்(Batik) பயிற்சி நிலையம் புங்குடுதீவில் திறந்து வைக்கப்பட்டது Read More »

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

வடமாகாணகல்வித்துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்ட யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் 05 பெப்பிரவரி 2021 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கௌரவ கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக்கடித்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு திறன் வகுப்பறை இற்கான கொரியநாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையையும் கௌரவ அமைச்சர் கௌரவ வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார். இவ்விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு, வடமாகாண கல்விதுறைசார்

வடமாகாண கல்வித்துறைசார் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல். Read More »

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வானது இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலக 73வது சுதந்திர தின கொண்டாடம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், நீண்டகாலத்திற்கு பின் ஒரு மாவட்டத்தின் சுதந்திர தின நிகழ்வில் தனக்கு பங்குகொள்ள

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம் Read More »

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான “ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது யாழ் நெடுங்குளம் கிராமத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், யாழ்ப்பாண அரச அதிபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் நண்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின்

“ஒரு வங்கி ஒரு கிராமம்” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »