ஆளுநர்

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை

இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை […]

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை Read More »

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில்

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை Read More »

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை வீணான குழப்பங்கள் வேண்டாம்! வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை வீணான குழப்பங்கள் வேண்டாம்! வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் 13 மார்ச் 2020 முதல் 20 ஏப்ரல் 2020 வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறைவழங்கப்படுவதாக கல்விஅமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும் Read More »

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணத்திற்கென 1375 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடமாகாணத்திற்கென 1375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஓரு மில்லியன் பெறுமதியான வீடுகளை வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெறுகிறது. 5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு விபரங்கள் அடங்கிய பட்டியல் ஏற்கனவே அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்து வரும் சில தினங்களுள் மிகுதி விபரங்களும் பூர்த்திசெய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணத்திற்கென 1375 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன Read More »

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது

வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் விரிவாக ஆராய்ந்து சில நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக 25 பெப்பிரவரி 2020 முதல் யாழ் நகரில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.  இதுவரை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நாய்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதாக குறித்த நடவடிக்கைகளை வழிநடத்தும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது Read More »

ஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

26 பெப்பிரவரி 2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரின் செயலாளர் திரு எஸ் சத்தியசீலன் அவர்களால் இரு புதிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளராக திரு ராஜேந்திரம் குருபரன் தனது நியமன கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார் இவர் முன்பு வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது இதேவேளை வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு பாலன் முகுந்தன் விளையாட்டுத்துறை திணைக்களத்தின்

ஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், பிரிவு தலைவர்கள், சாமாசங்களின் பிரதி தலைவர்கள், உள்ளிட்ட குழுவினர் 24 பெப்பிரவரி 2020 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது பேசப்பட்டன. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பில் இருக்ககூடிய சிக்கல் நிலைகள் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு எடுத்து கூறப்பட்டது இச்சந்திப்பின்

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் 17 பெப்பிரவரி 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான

நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சுடன் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவம் 17 பெப்ரவரி 2020 அன்று நடைபெற்றது. நீர்வளம் சார்ந்த மற்றும் ஏனைய உள்ளக மனைக் கைத்தொழில் முயற்சிகளில் மாதர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டமான நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இவ் மாதர்

நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார் Read More »