ஆளுநர்

வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் கொவிட் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் 04 நவம்பர் 2020 அன்று காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், வடமாகணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, காவற்துறையினர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், நாம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள […]

வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல் Read More »

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக வடக்கு மாகாணத்தினுள், கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கடலோரப் பாதுகாப்பினையும் கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைவார்களாயின் அல்லது உள்நுழைந்து மறைந்திருப்பார்களாயின் கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் உட்பட, எவராவது அருகில் உள்ள பொதுசுகாதார அதிகாரிகளிடத்திலோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் அண்மைய நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்து

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை Read More »

துறைசார் செயலாளர்களுடான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர் உடனான கலந்துரையாடல்வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 27 ஒக்ரோபர் 2020 அன்று 9.3௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் துறைரீதியான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்இ மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தேவையான விடயங்களை இனங்காணவும்இ தடையாக உள்ளவற்றை இனங்கண்டு தேவையானபோது சட்ட ஆலோசனை

துறைசார் செயலாளர்களுடான கலந்துரையாடல் Read More »

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

மேற்படி நிகழ்வானது போக்குவரத்து அதிகாரசபையில் ஏற்கனவே தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நேரம் கணிப்போர் ஆகியோருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 27 ஒக்ரோபர் 2020 அன்று  12.3௦ மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், உதவிச் செயலாளர், போக்குவரத்து அதிகாரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில்

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »

இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தேசமான்ய  பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திர் 07 செப்ரெம்பர் 2020 அன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது வட மகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இலகு தவணை கடன்களை வழங்கக்கூடியவிதத்தில் வங்கிகள் செயற்பட வேண்டுமெனவும் மக்கள் இலகுவாக அணுகக்கூடிய விதத்தில் வங்கிகள் தமது கிளைகளை மேலும் விஸ்தரிக் வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலில்

இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய 26.03.2020 இல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.   ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் பலசரக்கு பொருட்கள் உள்ளூர் பலசரக்கு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் Read More »

யாழ் பிராந்திய மக்களுக்கான வடமாண ஆளுநர் செயலகத்தின் அவசர அறிவித்தல்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தற்போது அவருக்கு கொறோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவ் ஆராதனையில்

யாழ் பிராந்திய மக்களுக்கான வடமாண ஆளுநர் செயலகத்தின் அவசர அறிவித்தல் Read More »

வடமாகாணத்தினை பாதுகாக்க எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஆளுநர் செயலகம் அறிவுறுத்தல்.

வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 19 மார்ச் 2020 அன்று வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது அத்தியாவசியத்தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு பிற்பகல் 3.00 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக

வடமாகாணத்தினை பாதுகாக்க எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஆளுநர் செயலகம் அறிவுறுத்தல். Read More »

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல்

உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கான பரம்பலை ஏற்படுத்தியவர்கள் என்று அவதானிக்கபட்டுள்ளது. இதன்பொருட்டு வடமாகாணத்திற்கான நிலமைகளை கருத்திற்கொண்டு இங்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் ஆளுநர் செயலகம் உரிய அமைச்சுக்கள்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் Read More »

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை Read More »