ஆளுநர்

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் ஆரம்பமாகியது. இத்தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்தொழில் நீரியல்வள துறை அமைச்சர் கௌரவ […]

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல். Read More »

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

‘நாடும், தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு 16 மார்ச் 2021 மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா மாவட்ட “ஒரு வங்கி ஒரு கிராமம்” திட்டத்தின் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொடர்ந்து மாவட்டத்தின் சாதனைப் பெண்களுக்கான விருதுகளை வழங்கி வைத்ததோடு அவர்களின் சாதனைகளை

சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது Read More »

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 16 மார்ச் 2021 அன்று காலை 9.3௦ மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2021இல் அனுமதி கிடைக்கப்பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், நடைபெற்று கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு போன்ற பல்வேறு விடயங்கள்

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம். Read More »

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றம் திணைக்களங்களின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 15 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சரவை செயலாளர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் அனைத்து திணைக்களம் சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த

வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 05 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற

கிளிநொச்சி மாவட்ட 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்04 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி . அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான்

2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் Read More »

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04 மார்ச் 2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர் , விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், “ விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம்

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் என்பன 25 பெப்பிரவரி 2021 அன்று காலை 9 மணிக்கு ஜெட்விங் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ‘விருது வழங்கும் விழா மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆவணங்கள் வெளியிடும் வைபவம் Read More »

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான்

ஒரு கிராமம் ஒரு வங்கி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் கிராமத்தின் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச சபையில் 16 பெப்பிரவரி 2021 அன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம் சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர்,

ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான் Read More »

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

உலக வங்கியின் அனுசரணையோடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் 1000 மெற்றிக்தொன் களஞ்சியசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கூழாமுறிப்பு எனும் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலே 16 பெப்பிரவரி 2021 அன்று  இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள

களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா Read More »