ஆளுநர்

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் விசேட காணி நடமாடும் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நடைபெற்றது. கண்டாவளைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரடியாகப் கலந்துகொண்டு பொதுமக்களின் காணிப் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 காணி தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் […]

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு Read More »

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நேரில் சென்று பார்வையிட்டார். இரணைமடுக் குளம் வான்பாயும் காலங்களில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கால், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைவதும்

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு Read More »

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல்

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல் Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (20.11.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

“சுற்றுலாத்துறை வளர்ச்சியே வடக்கின் தன்னிறைவுக்கு வழி” – இரு முக்கிய நூல்களை வெளியிட்டு ஆளுநர் நா.வேதநாயகன் உரை

சுற்றுலாத்துறையைத் முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியில் தங்கள் சொந்தக் காலிலேயே உறுதியாக நிற்கும் நிலையை உருவாக்க முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகம் வழங்கும். அதேவேளை, இத்துறையின் வளர்ச்சிக்குத் தனியார்த் துறையின் பங்களிப்பும் இன்றியமையாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தினால் உருவாக்கப்பட்ட ‘சக்தி அம்மன் வழித்தடங்கள்’ (Goddess Shakthi Trail) மற்றும் ‘சுற்றுலாப் பயண ஒழுங்கு’ (Tourism Itineraries) ஆகிய

“சுற்றுலாத்துறை வளர்ச்சியே வடக்கின் தன்னிறைவுக்கு வழி” – இரு முக்கிய நூல்களை வெளியிட்டு ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

“விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றுவதே எமது இலக்கு” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி

பண்ணைகளில் வெறும் கூலித் தொழிலாளிகளாக இல்லாமல், விவசாயிகளைச் சிறந்த பண்ணையாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் மாற்றுவதே எங்களின் பிரதான இலக்காகும். வடக்கு மக்கள் எத்தகைய நெருக்கடியிலும் தன்னிறைவான வாழ்க்கை வாழ்வதற்குத் துணைநிற்கும் விவசாயிகளை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கான கௌரவிப்பு

“விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றுவதே எமது இலக்கு” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி Read More »

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

தென்மாகாண கௌரவ ஆளுநர் பந்துல ஹரிசந்திர அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.11.2025) அங்கு நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். Read More »

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி

வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை நாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும், வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினரை இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத்

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி Read More »

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப உதவியுடன் அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களில் ஏற்கனவே இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த முயற்சியை மாகாணம் முழுவதும் விரிவாக்க

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம் Read More »

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர்.

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற, த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை காலை (17.11.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து முன்னேற்றங்களை விவரித்தனர். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாநாட்டின் ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்கள் பங்கேற்பு மற்றும் வடக்கின் முக்கிய

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர். Read More »