ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர்

மழை காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட வவுனியா மாவட்டத்தின் பிரமனாலன்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகளை (causeway) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை (01.11.2025) மக்கள் பாவனைக்கு கையளித்தார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், ரூ. 45.49 மில்லியனில் இந்த இரண்டு ஆற்றுச்சருக்கைகளும் முழுமையாக வீதி அபிவிருத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. […]

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர் Read More »

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது. இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அத்துடன் அடுத்த ஆண்டு

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர்

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷpயா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர் Read More »

வைத்திய நிபுணர் மலரவனால் எழுதப்பட்ட “தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்” என்ற நூல் ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’

வைத்திய நிபுணர் மலரவனால் எழுதப்பட்ட “தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்” என்ற நூல் ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read More »

புங்குடுதீவில் ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை நடைபெற்றது.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது பிரதேசத்திலும் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்கவேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்திப்பு, ‘அபிவிருத்தி

புங்குடுதீவில் ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை நடைபெற்றது. Read More »

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

நடத்தை மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப்பண்புள்ளவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ (NEXTGEN LEADERS) தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (29.10.2025) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர்,

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) நடைபெற்றது. கால்நடை மருத்துவர்களுடனான சந்திப்பில் முதலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில்

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி

தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club of Sri Lanka) தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில்

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »