ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும். ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. Read More »

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது.

தொண்டு அமைப்புக்கள் பல செயற்பட்டிருந்தாலும் அவை காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புகழாரம் சூட்டினார். இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இன்று

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது. Read More »

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகளின் 3ம் நாள் காலை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போகப்போகின்றது. மாணவர்களை இப்போதே சரியான துறைகளைத் தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்காவிடின் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகளின் 3ம் நாள் காலை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து (01.05.2025) அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்றும், அவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், எனவே அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வடமாகாண கௌரவ

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை. Read More »

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் இணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தும், ‘வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025’ இனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (11.04.2025) நேரில் சென்று பார்வையிட்டார். இந்தக் கண்காட்சி நேற்று ஆரம்பமானது என்பதுடன் நாளை சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025 Read More »

‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்துக்குரிய ‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்கான நினைவுக்கல்லை வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும் இணைந்து திரை நீக்கம் செய்தனர். அதன் பின்னர் கட்டடத்தை ஆளுநர் திறந்து வைத்தார்.

‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் 09.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. சுற்றாடல்துறை கௌரவ பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் அன்று 08.04.2025 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (04.04.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான காணிகளை அடையாளப்படுத்தி வழங்குமாறு பிரதி அமைச்சர், ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தொழில்கற்கைகளை நோக்கிய மாணவர்களின் ஆர்வம் தொடர்பாகவும் பிரதி அமைச்சர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »