ஆளுநர்

764 மற்றும் 769 வழித்தடங்களில் தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாக தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில், 764 மற்றும் 769 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் சங்கங்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30.04.2025) இடம்பெற்றது. 764 வழித்தட பேருந்துச் சேவையை பலாலி வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது என்றும், 769 வழித்தட பேருந்துச் சேவையை காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது […]

764 மற்றும் 769 வழித்தடங்களில் தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் Read More »

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

இந்து சமயத்துக்காக பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தமையறிந்து கவலையடைகின்றேன். இந்து சமயத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவரை மிக நீண்டகாலமாக நான் அறிவேன். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனம் ஊடாக இந்து சமயத்தை வளர்ப்பதற்காக பல நிகழ்வுகளை நடத்தி வந்திருக்கின்றார். அவற்றுக்கு மேலாக சிறுவர்களிடத்தே இந்து சமயத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும், இந்து சமய அறநெறிகளைப் போதிக்கவும் பல

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி Read More »

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி நிகழ்வு

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 30.04.2025 அன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது அஞ்சலி உரையில், இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை அனுபவித்திருக்கின்றோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையவேண்டுவதோடு,

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி நிகழ்வு Read More »

கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா 30.04.2025 அன்று புதன்கிழமை வரணி, நாவற்காட்டில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நிலையத்தில் நடைபெற்றது.

கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா Read More »

நூலக நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 29.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.  

நூலக நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம்

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார். திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் 29.04.2025 அன்று

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் Read More »

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் இன்று பயணம் மேற்கொண்டார்.

வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25.04.2025) பயணம் மேற்கொண்டார். அதன் நிறுவுனரும் தலைவருமான க.பாஸ்கரன் ஆளுநரை வரவேற்றதுடன், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்தப் பூங்காவை ஆளுநருக்கு சுற்றிக் காண்பித்தார். அதன் பின்னர் றீச்ஷா நிறுவனத்தினருடனான சந்திப்பில் ஆளுநர் கலந்துகொண்டார். அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறாமை, அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புக்கள், போக்குவரத்து வசதியீனங்கள்,

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் இன்று பயணம் மேற்கொண்டார். Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப்பயணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 24.04.2025 அன்று வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார். வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி வ.ஜெகானந்தன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநந்தன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப்பயணம் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 23.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது Read More »

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல்

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இன்றைய இளையோர் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றது. இளையோருக்கு பொழுதுபோக்குவதற்கான நேரமும் குறைவாகவுள்ளதுடன் அவர்களுக்கு பொழுதுபோக்குக்கான இடவசதிகளும் இல்லை. பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்கள் என்று ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்கள்

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் Read More »