ஆளுநர்

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது.

02.10.2024ந் திகதி மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மத்திய  நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி அவர்களும், யாழ் மாநகர சபை  ஆணையாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துசிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து  கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியில் கௌரவ ஆளுநர் அவர்கள் கலாசார மத்திய நிலையத்தை முழுமையாக […]

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. Read More »

சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை 01.10.2024ந் திகதி (இன்று) இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர், சுற்றுலாத்துறை பணியக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – யாழ்ப்பாணம், திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் 27.092024 அன்று காலை  ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஆளுநரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதிய ஆளுநரை வரவேற்க உயர் அதிகாரிகள், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஆளுநர் செயலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வின்போது புதிய கௌரவ ஆளுநர் நா.

வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (19/09/2024) மாலை நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் இந்த நன்கொடை பொருட்கள் கையளிக்கப்பட்டன. ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பின் ஊடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி ராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு Read More »

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில்

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார் Read More »

காங்கேசன்துறையில்சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (18/09/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில்

காங்கேசன்துறையில்சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் விநியோக கட்டமைப்பு சீர்க்குழைந்தமையால் பல நாட்கள் விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பாதிக்கப்பட்டது. இந்த சிக்கல் நிலைமை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் மனிதாபிமானப் பணி Read More »

வடக்கின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையவுள்ள ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துரை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.   இந்த இரண்டு வலயங்களும் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டு அங்குரார்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரால் ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடக்கு

வடக்கின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையவுள்ள ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »