ஆளுநர்

எதிர்கால வெள்ளஇடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் – கௌரவ ஆளுநர் அதிகாரிகளிடம் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். கௌரவ ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ். மாவட்டத்தின் இடர்நிலைமை மற்றும் எதிர்கால இடர்தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 28.11.2024 கடற்றொழில் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பந் துயகொத்தாவ, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் […]

எதிர்கால வெள்ளஇடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் – கௌரவ ஆளுநர் அதிகாரிகளிடம் கோரிக்கை Read More »

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை 28.11.2024 இடம்பெற்றது. இதன்போதே ஆளுநர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில்

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு Read More »

இடர்நிலைமையின் போது தன்னார்வமாக உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உதவிகளை மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடர்நிலைமையின் போது தன்னார்வமாக உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களுடன் தொடர்புகொண்டு உதவிகளை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். நேரடியாக சில நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதனால், ஒரே தரப்பினரே அவற்றை மீளவும் பெறும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து இதனை முன்னெடுப்பதன் ஊடாக வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இடர்நிலைமையின் போது தன்னார்வமாக உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உதவிகளை மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

உதவிகளை மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கு தெரிவிப்பு

இடர்நிலைமையின் போது தன்னார்வமாக உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களுடன் தொடர்புகொண்டு உதவிகளை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். நேரடியாக சில நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதனால், ஒரே தரப்பினரே அவற்றை மீளவும் பெறும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து இதனை முன்னெடுப்பதன் ஊடாக வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உதவிகளை மாவட்டச் செயலகங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கு தெரிவிப்பு Read More »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று மோசடி செய்யப்ட்ட இளைஞர்களின் பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024 ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று மோசடி செய்யப்ட்ட இளைஞர்களின் பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு Read More »

முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல்

முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 26.11.2024 இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது இயன்றளவு சுற்றாடல் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாசார் முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் Read More »

இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை 27.11.2024 நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு

இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் Read More »

நடமாடும் சேவை ஒத்திவைப்பு

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளை புதன்கிழமை 27.11.2024 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

நடமாடும் சேவை ஒத்திவைப்பு Read More »

ஹாட்லி கல்லூரியின் மாணவன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024 தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய

ஹாட்லி கல்லூரியின் மாணவன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து Read More »

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA)  மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை 25.11.2024 சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம்

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »