ஆளுநர்

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 13.12.2024 அன்று  வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களை விரைந்து திணைக்களங்கள் தயாரிக்கவேண்டும் எனவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆகியனவற்றின் […]

வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் Read More »

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்

போர் முடிந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், தேசிய உற்பத்திக்கு குறைந்தளவு பங்களிப்புச் செய்கின்ற நிலைமையிலேயே எமது மாகாணம் இருக்கின்றது. அதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  புதன்கிழமை (12.12.2024) காலை, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும் Read More »

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில்  வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றது. பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்,

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் (ITEC Day) யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் 11.12.2024 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்கு பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்

யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு 11.12.2024 அன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை நிகழ்நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் 11.12.2024 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். ‘தமிழர்களுக்கு என்று தனிச் சிறப்பான

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு Read More »

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (05.12.2024) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரிடமும் எங்களை விஞ்சிய ஏதாவது திறமை இருக்கின்றது. அது பாராட்டப்படவேண்டியதுடன் இன்னமும் ஊக்குவிக்கப்படவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட அன்பாகப் பழகக் கூடியவர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று புதன்கிழமை (04.12.2024) ஊரெழு என்.கே. மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய இளையோர் கஷடப்பட்டு வேலை செய்வதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இலகுவாக உழைக்கலாம்

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் Read More »

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார்.

திருமறைக்கலாமன்ற தினமும், வைரவிழா ஆண்டின் ஆரம்பமும் கலைத்தூது கலையகத்தில்  செவ்வாய்க்கிழமை மாலை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில், திருமறைக்கலாமன்றத்தின் நிகழ்வுகளை நான் தவறவிடுவதில்லை. திருமறைக்கலாமன்றத்தின் எந்தவொரு நிகழ்வும் தரமானதாகவும் அதன் தனித்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கும். திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் மறைந்த அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும்தான், இந்த நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணம். மரியசேவியர் அடிகளார் அவர்களின் நல்ல எண்ணமும், சிந்தனையும்தான் இந்த நிறுவனத்தை இன்று விரிவாக்கி

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார். Read More »