ஆளுநர்

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர்

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) கடைப்பிடிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் நிகழ்வின் தலைமை […]

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் 11.68 மில்லியன் ரூபா செலவில் 2018ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், 2024ஆம் ஆண்டு உலக மண் தினத்தை முன்னிட்டு கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024)கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது. Read More »

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேநாயகன் அவர்களுக்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும்

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் Read More »

மார்கழி இசைவிழா – 2024

யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடல் யாழ் வணிகர் கழகம் ஆகிய இணைந்து நடத்தும் மார்கழி இசைவிழா – 2024′ இன் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை (28.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  

மார்கழி இசைவிழா – 2024 Read More »

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தால் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான காணொலி வெளியீடு மற்றும் சிவாலயங்களின் வழித்தடம் கைநூல் வெளியீடு என்பன வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (28.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் தனித்துவங்களை உள்ளடக்கி தனித்தனியான காணொலி மற்றும் மாகாணத்தின் ஈர்ப்புள்ள ஒவ்வொரு துறைகள் தொடர்பான காணொலி என்பன வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கிலுள்ள முக்கிய 27 சிவாலயங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தொகுக்கப்பட்டு

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர்

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த நலன்விரும்பிகளால், வட இலங்கை சர்வோதய குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு வெள்ளிரும்பிலான குடிதண்ணீர் பவுசர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28.12.2024) புங்குடுதீவு புஸ்பா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர் Read More »

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா

டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை (28.12.2024) இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர்

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா Read More »

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்

தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார் Read More »

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வெள்ளிக்கிழமை மாலை (27.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (27.12.2024)

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு Read More »