npc2018z

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு

லண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிறு (ஒக்.20) முற்பகல் லண்டனில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின்  கல்வி ,சுகாதாரம் ,விவசாயம் ,இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு […]

கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு Read More »

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 21 ஒக்ரொபர் 2019 அன்று முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. லண்டனுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் , அதற்கு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உதவ வேண்டுமென்றும் ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் கடந்த சிறு போகத்தைப் போன்று இக்கால போகத்திலும் (பெரும் போகம்) மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்ட மானது அமுல்படுத்தப் பட்டுள்ளது. விவசாயத் துறை மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெரும் போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு புத்துயிரளித்து இளையோரை விவசாயத்தில் நாட்டம் கொள்ளச் செய்கின்ற வகையில் மாகாண விவசாயத் திணைக்களமானது ஒக்டோபர் 7 தொடக்கம் ஒக்டோபர் 12 வரையான காலத்தை விசேட விவசாய ஊக்குவிப்பு

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம் Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் அந்நிய ஆக்கிரமிப்புக் களையான பாத்தீனியம் தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று 12.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. பாத்தீனியமானது பயிர் மற்றும் மேய்ச்சல் களையாக விளங்குவதுடன் மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமைகளையும், சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தவல்லது. களைகொல்லிகளைத் தாங்கிவளரும் இந் நச்சுக் களைகளானது பயிர் உற்பத்தியில் பாரியபின்னடைவை ஏற்படுத்துவதுடன் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. இந் நிலையில் இந் நச்சுக் களை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் (Solar energy  integrated crop cultivation) தொடர்பில் பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. தற்காலத்தில் மிக ஆழமான நீர் முதல்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதற்கு இலவச சக்தியாக சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலவேளைகளின் இதன் மூலம் கிடைக்கப்பெறும் மேலதிக ஈட்டம் வீட்டுத் தேவைக்காகவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இச் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரை குறைந்தது 40 அடி உயரத்திற்கு

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் Read More »

முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் தலைமையில் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 15 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது . -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் தலைமையில் திறப்பு Read More »

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

”சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லாக் காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்புச் சமனாக இருத்தல் வேண்டும்.” வட மாகாண பெண்கள் சாரணியத்தை மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தினால் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் 12 அக்டோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தெற்கு ஆசியாவில்

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது ஆளுநர் என்ற ரீதியில் போருக்கு பின்னரான வடமாகாணத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்ததுடன், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடுவதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். மேலும், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாண மக்களுடைய அபிவிருத்திக்கு இந்த வங்கி எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள வங்கியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இந்த கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பிரித்தானிய அரசின் உதவியினையும் எதிர்பார்த்திருப்பதாக

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார் Read More »

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவிற்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி 12.10.2019 அன்று நடாத்தப்பட்டது. இதன்போது 5 வகையான சமையல் குறிப்புக்கள் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. காளான் உணவுகள் அதிகளவு புரதத்தைக் கொண்டிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் கொலஸ்திரோல் போன்ற நோய்களுக்கெதிராக மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இவை விட்டமின் – E இனை அதிகளவில் கொண்டுள்ளது. கலமுதிர்ச்சியைத் தடுத்து இளமையானதோற்றத்தை வழங்குகின்றது. கலமீளுருவாக்கத்தை தூண்டுகிறது. இப் பயிற்சிநெறியில் அப்

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி Read More »

சர்வதேச முதியோர் வார விழா -2019

சர்வதேச முதியோர் வார விழாவானது ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தில்; 01.10.2019 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 07.10.2019 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து 07நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது அரச முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் முதியோர் அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கைதடி அரச முதியோர் இல்ல மூத்தோருக்கான விளையாட்டுப்போட்டி, சமூகத்தில் மூத்தோருக்கு சேவையாற்றுவோர் மற்றும் முதியோருக்கு சேவையாற்றும் நிறுவனங்களை கௌரவித்தல்

சர்வதேச முதியோர் வார விழா -2019 Read More »