npc2018z

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை

இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை […]

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை Read More »

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில்

வடமாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயல் திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆளுநர்  பணிப்புரை Read More »

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான கல்விச் சுற்றுலா

தேன் உற்பத்திக்காக தேனீவளர்ப்பினை அபிவிருத்தி செய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான பயிற்சி நெறியைத் தொடர்ந்து அவ் விடயம் தொடர்பான கல்விச் சுற்றுலாவானது 27.02.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள கீரிசுட்டான் எனும் கிராமத்தின் காட்டுப் பகுதிக்கு, வடமாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட  40 பேரைக் கொண்ட குழுவினர் இக்களச் சுற்றுலாவில் ஈடுபட்டனர். இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகைநிலைப்

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான கல்விச் சுற்றுலா Read More »

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை வீணான குழப்பங்கள் வேண்டாம்! வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை வீணான குழப்பங்கள் வேண்டாம்! வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் 13 மார்ச் 2020 முதல் 20 ஏப்ரல் 2020 வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறைவழங்கப்படுவதாக கல்விஅமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும் Read More »

சர்வதேச மகளிர் தினம் – 2020

வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினமானது இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம், கிளிநொச்சி, தப்ரபேன் Sea Food (Pvt Ltd), மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப் பொருளில் 2020.03.10 அன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை

சர்வதேச மகளிர் தினம் – 2020 Read More »

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணத்திற்கென 1375 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடமாகாணத்திற்கென 1375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஓரு மில்லியன் பெறுமதியான வீடுகளை வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெறுகிறது. 5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு விபரங்கள் அடங்கிய பட்டியல் ஏற்கனவே அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்து வரும் சில தினங்களுள் மிகுதி விபரங்களும் பூர்த்திசெய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணத்திற்கென 1375 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன Read More »

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் (பாகம்-1) இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் 29 பெப்பிரவரி 2020 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் கலை,

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு Read More »

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி

தேன் உற்பத்திக்காகதேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் எனும் பயிற்சி நெறியானது வட்டக்கச்சியிலுள்ள மாவட்டவிவசாயப் பயிற்சிநிலையத்தில் 26.02.2020 ஆம் திகதி நடைபெற்றது. இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகை நிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டாகிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர். மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் இப் பயிற்சிநெறியில் பங்குபற்றிப் பயனடைந்தனர் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் இப் பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சிநெறியில்

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி Read More »

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது

வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் விரிவாக ஆராய்ந்து சில நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக 25 பெப்பிரவரி 2020 முதல் யாழ் நகரில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.  இதுவரை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நாய்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதாக குறித்த நடவடிக்கைகளை வழிநடத்தும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது Read More »