கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ்; நிலக்கடலை விதை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன்; விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளீடுகளாக ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20Kg ஜம்போ நிலக்கடலை விதை, 25Kg ஜிப்ஸம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் தற்போது அறுவடை நிலையில் காணப்படுகின்றது. மேற்படி நிலக்கடலைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு பயனுடையதாக […]
