npc2018z

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023

சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி எமது உள்ளுர் விவசாயப பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உலக தரிசன நிறுவன நிதி அனுசரணையுடன் சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் 2023.06.15 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி […]

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023 Read More »

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 25.05.2023 (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு.ஸ்ரீ ராஜேஷ் நட்ராஜ் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல் Read More »

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 24.05.2023 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்பாடுகள், சபை வீதிகள், சபை வருமானங்கள், சோலைவரி அறவீடுகள் மற்றும் நிலுவைகள், மன்றங்களின் செயலாற்றுகை மதிப்பீடு, கழிவு முகாமைத்துவம், சத்துணவு வழங்கல், டெங்கு ஒழிப்பு, சிறுவர் பூங்கா பராமரிப்பு,

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல் Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 )

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தினால் இவ்வருடத்தின் சர்வதேச சுற்றாடல் தினமானது ‘பிளாஸ்ரிக் மூலம் ஏற்படக்கூடிய மாசை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் இந்த ஆண்டு மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 05ம் திகதி வரையிலான வாரம் ‘தேசிய சுற்றாடல் வாரமாக’ அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக வடக்கு மாகாண சபையிலும் வாரம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முதற்கட்டமாக 2023.05.30 அன்று மரநடுகை தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும்

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 ) Read More »

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலியில் கடந்த 24.05.2023 அன்று அகஸ்திய முனிவருடைய சிலையானது புதிதாக நிறுவப்பட்.டது. அகஸ்திய முனிவருடைய சிலையானது மருந்து உற்பத்திப்பிரிவின் இயந்திர இயக்குனரினால் அன்பளிப்பு செய்யப்பட்டு மருந்து உற்பத்திப்பிரிவு வளாகத்தின் முற்புறப் பகுதியில் நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், நவக்கிரி மூலிகைத்தோட்டத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி,

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது Read More »

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களமானது சேவையினை விஸ்தரிக்கும் முகமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் கடந்த 22.05.2023 அன்று சுதேச மருத்துவ சேவையை ஆரம்பித்துள்ளது. கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையானது இச் சேவையை கைதடி வயோதிபர் இல்லத்தில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலையில் கடமை புரியும் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமூக மருத்துவ உத்தியோகத்தர்களினால் இவ் வயோதிபர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில்

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி Read More »

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

உலக வங்கியின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளரின் வழிகாட்டலில் இந்நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியன ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். முன்பள்ளி மாணவர்களை போசணைக் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில் வடமாகாணம் முழுவதிலுமுள்ள 1600 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ‘சத்துமா’ வழங்கும் செயற்பாடு 02.05.2023 ஆம் திகதி அன்று மாகாணம் முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளில் வைபவ ரீதியாக

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் Read More »

ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணை – வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு தேராவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணையில்; பெரிய அளவிலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் தலைமையில் 19.04.2023 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் எம்.சர்மினி, மாகாண

ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணை – வயல் விழா Read More »

தேசிய மரநடுகை நிகழ்வு

நாட்டின் சுபீட்சத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாய அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நாட்டின் செழுமையை நினைவுகூரும் பொருட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 20.04.2023 அன்று வியாழக்கிழமை சுபநேரம் காலை 6.38 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், இறைவரி திணைக்கள ஆணையாளர், உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இம் மரநடுகை நிகழ்வில் நீண்ட

தேசிய மரநடுகை நிகழ்வு Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project

வடமாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மார்ச் மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project Read More »