Balasingam Kajenderan

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்களை (Diploma in Youth Leadership Program) நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் (08.09.2023) வவுனியாப் பல்களைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் குறித்த டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 307 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியாப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் திரு.வை.நந்தகோபன் மற்றும் UNDP […]

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு Read More »

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலய சிறப்பு திருப்பலி பூசையில் ஆளுநர் கலந்து கொண்டார்

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலயத்தில் நடைபெற்ற அடைக்கல மாதாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடுவதற்கான நவதின வழிபாடுகளின் ஒன்பதாவது நாளான இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூசையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலய சிறப்பு திருப்பலி பூசையில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ்.கரவெட்டி கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் 06.09.2023 (புதன்கிழமை) ஆரம்பமானது. இந்த கட்டுமானத்திற்காக 35 மில்லியன் ரூபா தொகை செலவிடப்படவுள்ளது. கரவெட்டி பிரதேசத்தில் கோவிற்சந்தை  கிராம மக்கள் தற்காலிக கட்டிடத்தில் இதுவரையில் தமது வியாபார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக கட்டடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், நுகர்வோரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய வணிக இடம் அமைப்பது

வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மக்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகள் சபை பூரண ஆதரவை வழங்கும் எனவும் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் அவர்களை 05.06.2023 மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் நல்வாழ்வு தொடர்பில் திருப்திகரமான போக்கு காணப்படுவதாகவும்,

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். Read More »

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது

வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 அன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்டமட்ட மற்றும் வலயமட்ட வெற்றிகளின் பின்னர் மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 5000 விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது Read More »

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஏற்பாட்டில் நடைபெற்ற “இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை அமைப்பு குழுவில் வடமாகாண ஆளுநர் கெளரவ திருமதி பி.எஸ்.எம் சார்லஸ் பங்குபற்றியிருந்தார்.

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை Read More »

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்

கடந்த 25.08.2023 அன்று, 133 வது தொல்லியல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் சேவையாற்றும் அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டு வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம் 31 ஆகஸ்ட் 2023 அன்று கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் திரு ஒலிவர் பிரஸ் (OLIVIER PRAZ) தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய வந்த அவர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 23.08.2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு. Read More »

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

தற்போதைய வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை தாம் வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி ஜே சங் கூறினார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் 23 ஆகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் Read More »