Mathuranthaki

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம்

இவ்வாண்டிற்கான 3 ஆம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார […]

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம் Read More »

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024

மாகாண மட்ட சர்வதேச முதியோர் தின விழாவானது 15.10.2024ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ Hoover மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திரு இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா அவர்களும் கலந்து கொண்டார்கள். இம் முதியோர் தின விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024 Read More »

சர்வதேச சிறுவர் தினவிழா 2024

இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு சிறுவர்தினவிழாவானது மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் 05.10.2024 அன்று இலங்கை வேந்தன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினம் ‘சிறுவர்களை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’ எனும் தொனிப் பொருளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகின்றது. மாகாணமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மங்கல விளகோற்றலை அடுத்து சிறுவர்களின் மும்மதப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுனர்

சர்வதேச சிறுவர் தினவிழா 2024 Read More »

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.10.2024 காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது தனியார் போக்குவரத்து சபையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தனியார் பேரூந்து நிலையம், பஸ் தரிப்பிடங்களில் காணப்படும் வசதி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அரச போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடமாகாண சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கானது LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் TILKO விடுதியில் செப்ரெம்பர் 26, 27 திகதிகளில் நடைபெற்றது. இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்களின் அழைப்பின் பெயரில் திரு.இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களும் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வடமாகாணம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக் கருத்தரங்கின் வளவாளராக

வடமாகாண சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கு Read More »

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது

வட மாகாணத்தில் உணவு சார் உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் சிறுதொழில் முயற்சியாளர்களால் கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உணவு பொதியிடல் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 13.08.2024 ஆம் திகதியன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 35 தொழில்முயற்சியாளர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் 14.08.2024 ஆம்

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறை தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தின் மாவட்ட ரீதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஒருநாள் பயிற்சிப்பட்டறை முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி, மாவட்டங்களில் தனித்தனியாக நடாத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையில் முல்லைத்தீவு, மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 16.07.2024 ஆம் திகதியும் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 18.07.2024 ஆம் திகதியும் மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 தொழில் முயற்சியாளர்களுக்கு 22.07.2024

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறை தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச  மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

தெய்வீக சுகானுபவம் – 10

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத்தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் – 10 நிகழ்வானது 2024.08.18 ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக

தெய்வீக சுகானுபவம் – 10 Read More »

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது

நெடுவூர் மூவிழா – 2024 இனை முன்னிட்டு உணர்வும் உறவும் அமைப்பானது 05.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை வடமாகாண சுதேச மருத்தவத்திணைக்களத்துடன் இணைந்து மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வினை நெடுந்தீவில் நடாத்தினர். இக்கண்காட்சியில் மூலிகைகள், சிறுதானியவகைகள், பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தல்களுடன் அவற்றிற்குரிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.  மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இயற்கை மூலிகைப்பாணங்கள், இலைக்கஞ்சி, நீரிழிவு முகாமைத்துவம், சூரிய நமஸ்காரம் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும்

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது Read More »