யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா 01.01.2025 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு N.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம செயலாளர் திரு.L.இளங்கோவன், துணைவேந்தர், பேராசிரியர் S.சிறிசற்குணராஜா, கலை, விஞ்ஞானம், இந்து நாகரிக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர் ரகுராமன், பேராசிரியர் ரவிராஜன் பேராசிரியர் பத்மநாதன் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் சார்பில் தொழில்நுட்ப கற்கைகள் […]
